Sunday, April 21, 2019

வாழைப்பழம்-மருத்துவ பயன்கள்

        நாம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை தவறாமல் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு வகை அற்புதமான அருமருந்துதான் வாழைப்பழம்.
        முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் மா,பலா,வாழை.இவை மூன்றும் நமது உடலுக்கு எண்ணற்ற பயனளிக்கிறது.மற்றும் இந்த வாழைப்பழம்  பஞ்சாமிர்தத்தில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது அப்படிப்பட்ட வாழைப்பழத்தின் நன்மைகளைப்பற்றி இங்கு காண்போம்.   



         🍌நீரிழிவு உள்ளவருக்கு வேக வைத்த வாழைக்காயுடன் பாகற்காய் ரசம் சேர்த்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
       
          🍌பாலில் நன்கு பழுத்த பழத்தை போட்டு வேக வைத்து குழைத்து கலக்கி சாப்பிட்டால் மூல வியாதி ,மூலத்தின் எரிச்சல் ஆகிய நோய்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.

          🍌உடலில் தோன்றும் ரத்த சிலந்தி போன்ற கட்டிகளுக்கு வாழைப்பழத்தை குழைத்துப் போட்டால் விரைவில் பழுத்து சீழ் வெளியேறி புண் ஆற உதவியாக இருக்கும்.
     
          🍌வாழை பலத்துடன் இளநீர் சேர்த்து குழைத்து சிறிது தேன் கலந்து பல வியாதிகளுக்கு உப்பில்லா பத்தியம் இருந்து உண்டால் நல்ல உணவாகவும் ,அம்மை , டைபாய்டு , காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகிறது .

          🍌 வாழைத்தண்டை பச்சையாக சாப்பிட்டால் நம் உணவில் சேர்ந்து வயிற்றுக்குள் சேர்கின்ற சிறு கல் , மண் போன்ற வேண்டாத பொருட்ட்களை அழித்துவிடுவதுடன் , முதிர்ப்பையில் சேரும் கற்களை கரைத்துவிடுகிறது .

          🍌கொனேரியா வியாதி உள்ளவர்களுக்கு நிவாரணம் தருகிறது .

         🍌சிறுகுழந்தைகளுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் சிறிதளவு இந்த நீருடன் சிறிது நெய்யும் சேர்த்து காலைநேரத்தில் பேதிக்கு  கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

         🍌பாம்பு கடிக்கும் இந்த வாழைத்தண்டு நீர் அருமருந்தாக உள்ளது .பாம்புக்கடியால் வாய்க்கிட்டி போய் வாய்திறக்க மாட்டத்தவர்களை வாழை படையை பொடித்து பரப்பி அதன் மீது படுக்கவைத்து சிறிது நேரத்தில் வாய்திறக்கக்கூடிய அளவில் உடலில் மாறுதலை பார்க்கலாம் .

        🍌வயிற்றுப்போக்கு , வயிற்றுக்கடுப்புகளுக்கும் ஒரு நல்ல நிவாரணியாகவும் செயல்படுகிறது .

        🍌 வாழை  பூவை சரியாக சமைத்து தொடர்ச்சியாக உண்டுவர நீரிழிவு , இருமல் மற்றும் நீண்டகால அஜீரணம் ஆகியவற்றிக்கு நல்ல பலன் தரும் .

        🍌வாழைப்பூவை வேகவைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வேதனைகளை குறைக்கும் .

      🍌அளவுக்குமேல் உடல்பருமன் உள்ளவர்கள் உடலின் அளவையும் எடையையும் குறைக்க சுத்தமான பசுப்பாலுடன் பழுத்த வாழைப்பழத்தை குழைத்து கலக்கி புதிய வாழைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சாறுடன் ஒரு தேக்கரண்டி அளவு நாளுக்கு இரண்டு மூன்று தடவை சாப்பிட்டால் , உடலில் வேண்டாத ஊளைச் சதையை குறைத்து முத்திரத்தில் கலந்து கொண்டு வராச் செய்யும் .இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் .

வாழைப்பழத்தின் வகைகள் :

பேயன்
அடுக்கு
ரஸ்தாளி
பச்சை
மலை
செய்வாழை
பூவன்
கற்பூரம்
மொந்தன்
நேந்திர
நவரை
சிங்கன்
கருவாழை
வெள்ளை

No comments:

Post a Comment