Friday, April 26, 2019

கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் !!!!

கோடை வெப்பத்தை தவிர்க்க வேண்டுமா?

 

 👉தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு தான் முதலிடம் . தண்ணீர் குடிப்பதன் மூலம்  உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

 

 👉கோடைக்கலத்தையும், கோடைகால நோய்களைத் தவிர்க்கவும் , தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை  சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர் , ஜூஸ், மோர் , எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கவேண்டும்.

 

 👉கோடையை சமாளிக்கவே இயற்கை நமக்கு அளித்த வரம் வெள்ளரி பிஞ்சு , தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது .இதில் 93 சதவிகிதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனை தரும்.

 

 👉கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க , அதிக அளவில் வியர்வை வெளியேறும் . அதனால், தண்ணீர் அருந்தவேண்டும்.

 

 👉மேலும் அதிக அளவு டீ , காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் .

 

அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள்:

 👉கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள் 

 

 👉உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்டகொள்வதன் மூலம் தோல் ரத்த நாளங்கள் சுருக்கம் ஏற்பட்டு வெப்பம் இழப்பை ஏற்படுத்தும். எனவே மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது .

 

குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள் :

 

 👉அவரவர் வேலை மற்றும் அவரவரின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும்.உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

 👉உடலில் நீர்சத்து குறையும்பட்சத்தில் மாலையில் களைப்பு , உடல்வலி,நாள்பட்ட சிறுநீர்ப் பாதை கல், மூலம் , வயதானவர்களுக்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் . உதடுகள் காய்ந்து போவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது , எப்போதும் துக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 

பொதுவான டிப்ஸ் :

 

 👉வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட , குழந்தைகளுக்கு தான் எளிதில் அதிகம் தொற்றும் , அதிக உஷ்ணம் காரணமாக , அம்மை , வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம். 

 

 👉வெளியில் செல்லும்போது , கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment