Tuesday, April 2, 2019

குழந்தைகளிடம் உங்கள் உணவு அக்கறையை திணிக்காதீர்கள் ..அது ஆபத்து

              



            பேசிக்கொண்டே  சாப்பிடக்கூடாது  என்பது  சாஸ்திரம் . அதாவது சாப்பிட்டுக்கொண்டே   பேசக்கூடாது. இது  முக்கியம்.

 அதே  போல்   சாப்பிடும்போது  இடையே  தண்ணீர்  அருந்தவும்  கூடாது 
காரணம் , தண்ணீரானது   சாப்பிடும்  உணவை  செரிமானம் ஆகச்  செய்யும் அமிலத்தை  நீர்த்துப்போக  செய்துவிடும்  .அதனால்  செரிமானம்  தாமதப்படும்  . உணவின்  சாரம்  உடலில்  சேராமல்  போய்விடும் . இது  விஞ்ஞான  ரிதியான  மருத்துவ  உண்மை  .             
kulanthaikal unavu க்கான பட முடிவு
 குழந்தைகளுக்குக்கூட , உணவை  அளவோடுதான்  ஊட்டிவிட  வேண்டும் .
பிறந்த  குழந்தை  அழுகிறது .  தாயானவள் ,  குழந்தையை  மார்பகத்தோடு  அணைத்து   பால்  ஊட்டுகிறாள் . குழந்தை  போதும்  என்றநிலையில்  மார்பகத்தில்  இருந்து  வாயை  எடுத்துவிடுகிறது  .

ஆனால் , குழந்தையின்  முகத்தை மீண்டும்  மார்பகத்தோடு  அழுத்தி   வைத்து   பால்  அருந்தவைப்பது  தவறானது . மேலும்  மேலும் 
புகட்டினால் ,அது ஏற்கனவே  அருந்திய  பாலை  வாந்தி 
எடுத்துவிடும் . 
        
குழந்தை  வளரும்போது  ,அதன்  உடல்  வளர்ச்சிக்கான  உணவு  பொருட்களை  தானே  சாப்பிட்டுக்கொள்ளும் . என்னவோ  குழந்தையின்  உடலை தாங்கள்தான்  வளர்ப்பதாக  பெற்றோர்கள்  பாவித்துக்கொண்டு  ,உணவு  ஊட்டுவதையே  குறிக்கோளாகச்  செய்கின்றனர் .
        
குழந்தையின்  வயிறு  மிகவும்  மென்மையானது .உணவு  ஜீரணிக்க குழந்தையின்  வயிற்றுக்கு  இடம்  அளிக்கவேண்டும் . இரைப்பை  முழுக்க  உணவு  பண்டங்களை  திணித்து  விட்டால்  அது  எப்படி செரிமானமாகும்?
kulanthaiyen vayeru க்கான பட முடிவு

குழந்தை  பசியெடுக்கும்  போது தானே   அழும் . உணவு  கொடுத்தால்  அழுகையை  நிறுத்திவிடும் . போதும்  என்று நினைத்தால்  உணவை  மறுத்துவிடும் .தொடர்ந்து   ஊட்டினால்  மீண்டும்  அழ ஆரம்பித்துவிடும் . 
இயற்கைதான்   குழந்தையை  அழ  வைக்கிறது .
 
ஆனால்  அது நம் தாய்மார்களுக்கு  புரிவதில்லை  .குழந்தையை  வெளியே  தூக்கி  சென்று  ,விளையாட்டு  காட்டிக்கொண்டே  உணவை  
திணிக்கிறார்கள் .குழந்தைகளை பயமுறுத்தி  ஊட்டும்போது  நரம்பு மண்டலம்  பாதிக்கப்படுவதால் , வாந்தி  ஏற்படுகிறது .

ஆனால் , தாய்க்கு  கோபம்  பொத்துக்கொண்டு  வருகிறது .  குழந்தையின்  தலையில்  தலையில்   குட்டுக்  குட்டியும் , முதுகில்  அடித்தும்  ,கன்னத்தை  கிள்ளியும் ,காதை  திருகியும் ,உணவை  திணிக்கிறாள் .
                      தொடர்புடைய படம்
இதுபோன்ற  வன்செயல்கள் , அக்கறை  நிமிர்த்தமானது  எனலாம் . ஆனால் குழந்தையின்  உடல் -மன  ஆரோக்கியத்தை  கெடுத்துவிடும் . எத்தனை தாய்மார்களுக்கு  இந்த  உண்மை  தெரியும்.

உங்கள்  குழந்தைகளுக்கு  உணவு  புகட்டுவதில்  நீங்கள்  சரியாக  இருந்தால்  ,அதைவிட  சிறந்த  வளர்ப்பு  முறை  ஏதுமில்லை . அப்போதுதான் ,தாய்க்கும் குழந்தைக்குமான  உறவு   ஆரோக்கியமாக  இருக்கும் .

எனவே, அளவான , இயல்பான ,இயற்கையான  நல்ல  உணவுகளை குழந்தைகளுக்கு  கொடுங்கள் .

No comments:

Post a Comment