Monday, April 22, 2019

கோடையில் சாப்பிடவேண்டிய பழத்தில் கட்டாயம் இதும் ஒன்று ....



    இந்த பழம்  தான் .....அடிக்குற வெயிலுக்கு செம மாஸ் காட்டுது ..😎😋



            தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது .வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் , பலரது உடலானது நெருப்பை போல வெப்பமாக காணப்படும்.காலநிலை தீடிரென மாறும்பொழுது , பலர் கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே உடல்நலக்குறைவால் அவதிப்படுவார்கள் .


வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும் , பலங்களைம், பானங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.


கோடையில் தவறாமல் சாப்பிடவேண்டிய பழங்களில் இதும் ஒன்று  முலாம்பழம் .இதில் நீர்சத்து அதிகாகமாகவே நிறைந்துள்ளது.மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி , பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகமாகவேய உள்ளது.

முலாம்பழம் கோடைகாலத்தில் மிக எளிதாக கிடைக்கக்கூடியது.இது அதிகப்படியான சத்துக்களை உள்ளடக்கியது .இது ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம்பழத்தில் 95% நீர்சத்துகள் வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சைடுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது .இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான குளிர்ச்சியும் தருகின்றன .

மருத்துவ பயன்கள் :


         🍘 இது உடலில் உள்ள வெப்பத்தை உடனடியாக போக்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் கொண்டவராகள் அதிகம் இந்த பலத்தை உட்கொள்ளலாம்

          🍘இந்த பலம் கிட்டினியில் உள்ள கல்லை கரைக்கக்கூடிய தன்மை கொண்டது.மேலும் முதுமைக் காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடியது .

         🍘இப்பழம் உடல் சோர்வை நீக்கக்கூடியது . உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது .

         🍘முலாம்பழத்தில் சிறுநீர் பிரிப்புத்தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோயிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

         🍘சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கு அல்சர் என்னும் வயிற்றுபுண் இருக்கும் . இவர்கள் இந்த பலத்தை தொடர்ந்து சில நாட்ட்கள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் பூரண குணமடையும் .

         🍘முலாம்பழத்தை ஜூஸ் செய்து குடிப்பதால் இதில் உள்ள பொட்டாசியம் இதய துடிப்பை இயல்பாக்கி, முலைக்கு தேவையான ஆக்ஸிஜினை அனுப்பி , முளைசோர்வை குறிக்கும்.

         🍘இந்த பலத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேன்படும்.

         🍘நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சர்க்கரை, குறைந்த கலோரி உணவு உண்பதால் எப்பொழுதும் சோர்வை உணர்வார்கள் . அவர்களுக்கு முலாம்பழ ஜூஸ் மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment